கிரிக்கெட் செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கு ஆரஞ்சு கேப்பை இந்த மாதிரி விளையாடுபவருக்கு கொடுத்தால் என்ன? – முன்னாள் வீரர்கள் கருத்து

Orange cap

தற்போது நடைபெற்று வரும் 16 வது ஐ பி எல் சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 16 போட்டிகளில் டெல்லி அணி மட்டுமே இன்னும் வெற்றி கணக்கை துவங்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த மும்பை அணி நேற்று டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை துவங்கி உள்ளது.

ஐபிஎல் தொடர் என்றாலே,அனைவருக்கும் போட்டி முடிந்தப் பின் வழங்கப்படும் விருதுகளை ஞாபகத்தில் வரும். அந்த அளவிற்கு அதிகமாக ஒவ்வொரு போட்டி முடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிக ரன் குவித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி மற்றும் அதிக விக்கெடுகள் எடுத்ததாக வழங்கப்படும் பர்பில் தொப்பியை வாங்குவதற்காக பலரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமையில் வெளிப்படுத்துவது உண்டு.

நடப்பு சீசனில், டேவிட் வார்னர் நான்கு இன்னிங்ஸ்களில் சராசரியாக 52.25 மற்றும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் 114.83 இல் 209 ரன்கள் எடுத்தார். வார்னர் ரன்களை எடுத்திருந்தாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டிகளில் வெற்றி பெற அவரது ஆட்டங்கள் உதவவில்லை.

இதனால் ஆரஞ்சு கேப் வழங்குவதற்கான விதிமுறைகளை சிறிது திருத்தினால் நல்லதாக இருக்கும் என்று ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி மற்றும் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்கள்

ஆரஞ்சு காப் வழங்குவதற்கான நிபந்தனைகள் பற்றி டாம் மூடி கூறும் போது “அதிகமாக விரும்பப்படும் ஆரஞ்சு தொப்பி ஐ ஸ்டிரைக் ரேட் கொண்டு கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும். 20 ஓவர் போட்டிகளை பொருத்தவரையில் அதிக ரன்கள் எடுத்தாலும்,எடுக்கப்பட்ட ரன்கள் எத்தனை பந்துகளில் எடுக்கப்பட்டது என்பதே முக்கியம். இதில் ஸ்டிரைக் ரேட் இன் மதிப்பு மிகவும் மதிப்புமிக்கது என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பின் வரிசையில் இறங்கும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்களுக்கும் ஆரஞ்சு நிற தொப்பியை வெல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் . இதை நான் நிபுணர்களிடம் விட்டுவிடுகிறேன்” என்று கூறினார்.

இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஏபி டி வில்லியர்ஸ் கூறும்போது “இதை பல காலமாக சொல்லி வருகிறேன். இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இது தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மூன்றாவதாக இறங்கும் வீரர்களுக்கு இடையேயான போட்டியாக அமையும்” என்று கூறினார்.

இதுவரை ஆரஞ்சு தொப்பியை வென்றவர்களில் சென்னை அணியின் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது கே.எல் ராகுல் ஆகிய இருவர் மட்டுமே 130க்கு கீழ் ஸ்ட்ரைக் ரேட் கொண்டு ஆரஞ்சு தொப்பியை வென்றவர்கள்.
ஆரஞ்சு கேப் வெற்றியாளர்களின் வரலாற்றில், 2013 மற்றும் 2020 ஆண்டுகளில் முறையே மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சீசன் ஸ்ட்ரைக் ரேட் 130க்குக் கீழே பெற்றுள்ளனர். 2013 இல், கிறிஸ் கெய்ல் ஹஸ்ஸியை விட ஒரு இன்னிங்ஸ் குறைவாக விளையாடி 156.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 708 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் ஆவார்.

டிவில்லியர்ஸைப் பொறுத்த வரையில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஐபிஎல்லில் பெரும்பாலும் மூன்றாம் இடத்தில் விளையாடினார். 2016 இல் அவரது சிறந்த சீசன், 52.84 சராசரி மற்றும் 168.79 ஸ்ட்ரைக் ரேட்டில் 687 ரன்களை எடுத்தார், மேலும் சீசனின் மூன்றாவது அதிக ரன் எடுத்தவராக முடித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top