கிரிக்கெட் செய்திகள்

சென்னை அணியை எச்சரித்த வீரேந்தர் சேவாக் – என்ன காரணம்?

Msd

சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி பெங்களூரு எம்ஏ சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்களும் வழக்கம் போல அதிக வைடுகளை வீசினார்கள் இது சென்னை அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களை எரிச்சல் ஊட்டியது. ஏனென்றால் சென்னை அணியின் கேப்டன் தோனி ஏற்கனவே இருமுறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

இது குறித்து முன்னாள் இந்திய அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் கூறும்போது “பவுலர்கள் நோ-பால் மற்றும் வைடுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சென்னை அணி அதிக வைடுகள் வீசியதன் மூலம் இரண்டு-மூன்று ஓவர்கள் கூடுதலாக வீசியது. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக் கூடாது அவ்வாறு நடந்தால் கேப்டன் தோனிக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிக்கப்படும். இதனால் அந்த போட்டியில் கேப்டன் தோனி இல்லாமல் களமிறங்க வேண்டிய சூழ்நிலை சென்னை அணிக்கு ஏற்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது “முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும் என்று தெரிகிறது. அவர் தொடர்ந்து தன்னைத் தள்ளுகிறார், ஆனால் அவரது பந்துவீச்சாளர்கள் பல வைடுகள் மற்றும் நோ-பால்களை வீசினால், தோனி ஓய்வெடுக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்கள் வைட் பந்துகளை வீசுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. இவை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள்” என்று அவர் கூறினார்.

சென்னை அணி பந்துவீச்சு குறித்து விரேந்தர் சேவாக் கூறும்போது ” சென்னை அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என்று நான் முதல் நாளிலிருந்து சொல்கிறேன். அவர்கள் அந்தத் துறையில் அதிகம் பணியாற்ற வேண்டும். ஆனால் இன்னும் என்ன செய்ய முடியும்? இந்த சீசனில் அவர்கள் எவ்வாறு பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும்? பந்துவீச்சாளர்கள் இன்னும் துல்லியமாக இருக்க வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிரான அவர்களின் ஆட்டத்தை பாருங்கள், அவர்கள் 30-35 டாட் பந்துகளை வீசியுள்ளனர், அதனால் அவர்கள பெங்களூரு அணியை ஆறு ஓவர்களுக்கு ரன் எடுக்க விடவில்லை. இருந்தாலும், அவர்கள் அதிக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை கசியவிட்டதால் 218 ரன்களை விட்டுக்கொடுத்தனர்” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top