கிரிக்கெட் செய்திகள்

இந்த இலக்கு சின்னசாமி மைதானத்தில் எட்டக்கூடிய இலக்கு தான்,ஆனால் இவர் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் – ஹர்பஜன்சிங் பேட்டி

Rcb

சென்னை மற்றும் பெங்களூர் அணையின் போது போட்டி நேற்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது இதில் 227 ரன்கள் துரத்தி விளையாடிய பெங்களூர் அணி பெங்களூர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னையின் பந்துவீச்சாளர்கள் முதல் 15 ஓர்களை சரிவர வீசாவிட்டாலும் கடைசி ஐந்து அவர்களை சிறப்பாக வீசி அணிக்கு வெற்றி தேடி தந்தார்கள். இருப்பினும் பெங்களூர் அணியின் தொடக்கவீரராக களம் இறங்கிய விராட் கோலி சிறப்பாக விளையாடாததன் காரணம் என இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி நேற்று ஆட்டத்தில் நான்கு பந்துகளை எதிர்கொண்டு ஆறு ரன்கள் எடுத்த போது சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் இடது கை வேகம் பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். விராட் கோலி இன்னும் கொஞ்ச நேரம் சிறப்பாக விளையாடியிருந்தால் அனைத்து வெற்றி பெற்றிருக்கக் கூடும் என ஹர்பஜன்சிங் நம்புகிறார்.

விராட் கோலியின் நேற்று ஆட்டம் குறித்து ஹர்பஜன் சிங் கூறும்போது “விராட் கோலியின் இன்னிங்ஸ் முக்கியமானது. அவர் நீண்ட நேரம் விளையாடக்கூடிய, மேட்ச்-வின்னிங் நாக். சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த ரண்களை விரட்டுவது சாத்தியம். அதை நிறைவேற்ற வேண்டும் என்றால், கோஹ்லி ஒரு சேஸ் மாஸ்டர்தான். அவர் சிறப்பாக விளையாடியிருந்தால் கட்டாயம் நேற்றைய ஆட்டத்தின் முடிவு வேறு” என்று கூறினார்

மேலும் அவர் கூறும்போது ” நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல்லின் விக்கெட் தான் திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன். மற்றும் டு பிளெசிஸின் விக்கெட் முக்கியமானது. அவர் அங்கு நின்றிருந்தால், தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து ஆர்சிபிக்கு ஆட்டத்தை வென்றிருக்கலாம். ஐபிஎல் 2023 இல் இந்தப் போட்டியில் கிடைத்த இரண்டு புள்ளிகளும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமான புள்ளிகளாக இருக்கும்” என்று கூறினார்.

நேற்றைய பெங்களூர் அணியின் பேட்டிங் குறித்து பேசும்போது ” ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இடையே ஒரு நம்பமுடியாத பார்ட்னர்ஷிப், குறிப்பாக அவர்கள் பேட்டிங் செய்த வேகத்தில். அவர்கள் பிடிவாதமாகத் தோன்றினர்கள் , ஆனால் இலக்கு பெரியதாக இருக்கும்போது, ​​​​எந்த தவறும் அணிக்கு செலவாகும். ஆச்சரியம் என்னவென்றால், மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்குப் பிறகு டு பிளெசிஸும் வெளியேற பெங்களூர் அணியும் ஆட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியது ” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top