2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 தொடர் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் இன்று அகமதாபாத்தில் தொடங்க உள்ளது இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் நான்கு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் விளையாட உள்ளார்கள்.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் கடந்த முறை வென்ற கோப்பையை இந்த முறை தக்க வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் குஜராத் அணி களமிறங்க உள்ளது. அணியின் தலைவரான பாண்டிய மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சென்னை அணியை பற்றி பார்க்கையில் இந்த முறை அணியை வலுப்படுத்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஸ்டாக்சை ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு எடுத்தது. பேட்ஸ்மனாக மட்டுமே அவருடைய பங்களிப்பை வழங்குவார், என்றும் எப்போதாவது தான் பந்து வீசுவார் எனவும் அணி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருந்தது.இதனால் கடைசி கட்ட ஓவர்கள் வீசுவதற்கு தரமான பவுலர்கள் இல்லாமல் போனது. இருந்தாலும் , அணியின் தலைவராக எம் எஸ் தோனி இருப்பதால் கட்டாயம் இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையோடு வரவுள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த அணிக்குள் இடையான பயிற்சி ஆட்டத்தின் போது தோனி பேட்டிங் செய்ய தயங்கியதாகவும், முழங்கால் காயத்துடன் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பேட்டிங் செய்ய வந்தபோது, அவர் மிகவும் ஓடுவதற்கு கஷ்டப்பட்டதாகவும், மேலும் ஒரு காலை நொண்டியும் வந்துள்ளார். அவர் நடுவழியில் நின்று பின்னர் கிரீஸுக்கு நொண்டிய நிகழ்வுகளும் நடந்து உள்ளன. இதற்கிடையில், அவர் பயிற்சி போட்டியின் போது விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை.
இதனால் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாட மாட்டார் என்று தகவல் என்று வெளியானதை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். இதற்கான பதிலை தற்பொழுது சென்னை
அணியின் சிஇஓ திரு.
காசி விஸ்வநாதன் அவர்கள் கூறிஉள்ளார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “என்னைப் பொறுத்த வரையில் கேப்டன் 100 சதவீதம் விளையாடுகிறார். வேறு எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது” என்று கூறினார்.
இன்றைய போட்டியில் தோனி விளையாடவில்லை என்றால் இளம் வீரரான கெய்க்வாட் அல்லது கடந்த சீசனில் சில போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.
